புதன், 2 ஜூன், 2010

விக்னேஷ் மற்றும் கற்பகம் - இம்மாணவச் செல்வங்களின் மேல் படிப்புக்கு உதவுங்கள்!!!


விக்னேஷ் - திருப்பூர் மாணவன் மற்றும் கற்பகம் - செய்யாமங்கலம், கமுதி. இவர்கள் ஏழ்மையான மாணவ செல்வங்கள். நம் தமிழ்நாட்டிலிருந்து. குடும்ப வறுமையின் காரணமாக தனது கல்லூரி படிப்பை தொடர முடியாத சூழ்நிலை இருவருக்கும். ஆனாலும் மனம் தளராமல் தினமலர் பத்திரிக்கையின் வாயிலாக நமது உதவியை நாடியுள்ளார்கள். ஆதாரம்: http://www.dinamalar.com/News_Detail.asp?Id=10790 (விக்னேஷ்), http://www.dinamalar.com/humantrustdetail.asp?news_id=182 (கற்பகம்)...

தங்களது உதவி இம்மாணவனின் வாழ்க்கையில் பிரகாச ஒளி ஏற்படுத்தட்டும்.

ஆம், ஏழைக்கு எழுத்தறிவித்தல் எனப்படும் சுப்ரமணிய பாரதியின் உணர்வு பூர்வமான பாடலை கேள்விபட்டிருப்பீர்கள். இது செயல்பட வேண்டிய தருணம் நண்பர்களே.

அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
அன்னவாயினும் புண்ணியங்கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்

- சுப்பிரமண்ய பாரதி

எடுங்கள் உங்கள் கைபேசியினை. அழையுங்கள் கொடுத்துள்ள கைபேசி எண்ணினை...

விக்னேஷ் - 93675 28737.
கற்பகம் - 95851-41566, 97867-83244.

தங்களுக்கு இவர்களை தொடர்பு கொள்ள சிரமம் நேர்ந்தால், தினமலர் பத்திரிக்கையை நேரடியாக தொடர்பு கொள்ளவும்.
மேலும் படிக்க......

செவ்வாய், 16 பிப்ரவரி, 2010

குழந்தைகளும், நம் தமிழ் புலமையும்! [Tamil Efficiency]


குழந்தைகள்... நாம் அவர்களுக்கு இந்த உலகத்தை பற்றி அவர்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டுமாம். நாம்தான் அவர்களுக்கு நமது தாய் மொழியிலிருந்து அனைத்தையும் கற்றுக்கொடுக்க வேண்டுமாம். அப்போது நமக்கு தெரிந்ததைதானே சொல்லிக்கொடுக்கமுடியும். நமக்கு தெரியுமா? ம்ம்ம்... அதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும். ஆனால் ஒன்று... தயவு செய்து நமக்கு மற்றவர்களை விட அதிகம் தெரியும் என்று மட்டும் நினைத்து விடாதீர்கள். அதிலும் தத்தம் குழந்தைகளை விட... நான் என் குழந்தையிடம் தமிழில் தோற்றுப்போன ஒரு நிகழ்வை பகிர்ந்து கொள்கிறேன்.

நிகழ்வு 1:

இடம்: சாமி அறை
நிகழ்வு: சாமி கும்பிட சொல்லிக்கொடுத்தல் [இங்கேதானே சிக்கினேன்...]
பாத்திரங்கள்: நானும் எனது 1 வயது குழந்தை சிவாத்மிகாவும் [செய்கையும் சில வார்த்தைகளும் மட்டுமே பேசுவார்கள்]

நான்: இதோ பாரம்மா, இவர்தான் முருகன்... இவர் புகைப்படத்தை பார்த்து கன்னத்தில் போட்டுக்கொண்ட பிறகுதான் சாமி கும்பிட வேண்டும்.
சிவாத்மிகாவின் செய்கை: எனது [அதாங்க என்னோட] கன்னத்தில் [சப்பென்று] போட்டு விட்டு அதன் பிறகு அவர் சாமி கும்பிட்டார்.

நான் ஒரு நிமிடம் நிலைகுலைந்து போனேன். ஏன் அவர் தப்பாக புரிந்து கொண்டார் என்று. எனது மனைவியிடம் பகிர்ந்து கொண்டேன். அவர் கூறிய பதில் சிந்திக்கும்படி இருந்தது. மீண்டும் சிவாத்மிகாவுக்கு சாமி கும்பிட சொல்லிக்கொடுக்க முனைந்தேன்.

நான்: இதோ பாரம்மா, இவர்தான் முருகன்... இவர் புகைப்படத்தை பார்த்து உன்னுடைய கன்னத்தில் போட்டுக்கொண்ட பிறகுதான் சாமி கும்பிட வேண்டும்.
சிவாத்மிகாவின் செய்கை: மிக அழகாக அவரது கன்னத்தில் [மெத்துக்கையால்] போட்டு விட்டு அதன் பிறகு அவர் சாமி கும்பிட்டார்.

எனக்கு ஆச்சரியமாக இருந்தது... மேலும் இதிலிருந்து நான் சில விடயங்களை கற்றுக்கொண்டேன் மற்றும் அவற்றை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

1. நமக்கு தமிழ் தெரியும். ஆனால் தெரியாது.
2. நமக்கு தமிழ் தெரியாதபோது அதை அடுத்தவர்களுக்கு அரைகுறையாக சொல்லி கொடுக்ககூடாது.
3. நாம் தமிழை படித்து விட்டுத்தான் நம் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்கவேண்டும்.

நண்பர்களே மேலும்,

1. குழந்தைகளை குறைவாக மதிப்பிட்டு விடாதீர்கள்.
2. அவர்களுக்கு நம்மை விட அதிகம் புரிந்து கொள்ளக்கூடிய திறன் உண்டு.
3. நீங்கள் அவர்களுக்கு கட்டம் கட்டாதீர்கள். நீங்கள் அவர்களுக்குண்டான தேவைகளை மட்டும் நிறைவேற்றுங்கள். மற்றபடி அவர்களுக்கு என்ன தேவை என்பதை அவர்களிடம் விட்டு விடுங்கள். ஏனெனில் நமக்கு அவர்களுக்கு சொல்லிக்கொடுக்க தெரியாது.

இன்னும் சிலர் கூறுவது என் காதில் விழுகிறது.

1. அதற்காக குழந்தைகளை அப்படியே விட்டு விட முடியுமா என்று. எப்படிப்பட்ட கனவுகள் வைத்திருக்கிறேன் என்று.

நான் உங்களை விட்டுவிடச்சொல்லவில்லை. ஆனால் நீங்கள் அதற்கு சரியான வழிகாட்டியா என்பதை மட்டும் தீர்மானித்து கொள்ளுங்கள். நீங்கள் கூறியபடி உங்கள் குழந்தை உங்கள் கனவை அதன் கனவாக சுமந்து நனவாக்க விளைய வேண்டுமானால் உங்கள் தகுதியை வளர்த்துக்கொள்ளுங்கள். அதன்பிறகு குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க ஆரம்பியுங்கள்.

நான் ஆரம்பித்து விட்டேன். நீங்களும் ஆரம்பித்தால் நலமே!
மேலும் படிக்க......

ஞாயிறு, 24 ஜனவரி, 2010

கருப்பட்டியும் சென்னையும்!!!



கருப்பட்டி... இந்த வார்த்தையை கேட்டால் அனைத்து தமிழர்களுக்கும் நாவில் எச்சில் ஊறும். ஆனால் இன்றோ அதன் நிலை என்ன? கீழ்க்கண்ட அனுபவங்களில் இருந்து தெரிந்து கொள்ளுங்கள்.

இடம் 1: சரவணா ஸ்டோர்ஸ், பலசரக்கு பிரிவு, தி.நகர், சென்னை. நான் அவரிடம் கருப்பட்டி இருக்கிறதா என்று கேட்டேன். அதற்கு அவர் இல்லை என்று சொல்லியிருந்தால் கூட மனம் வெறுத்திருக்க மாட்டேன். ஆனால் அவர் என்ன கேட்டார் தெரியுமா? கருப்பட்டி என்றால் என்ன? அது எப்படி இருக்கும்? நான் பதில் பேச கூட தெம்பில்லாமல் அங்கிருந்து நகர்ந்து வந்து விட்டேன்.

இடம் 2: மளிகை கடை, அரும்பாக்கம், சென்னை. நான் கடைகாரரிடம் கருப்பட்டி இருக்கிறதா என்று கேட்டேன். அவரும் அது என்ன என்று கேட்டார். தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத சக்திக்குமரன் [அதாங்க நாந்தேன்...] கருப்பட்டியை பற்றி விளக்க ஆரம்பித்தான். அது வெல்லம் போல இருக்கும், கருப்பாக இருக்கும் என்று காணமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பை போல அதன் அங்க அடையாளங்களை பற்றி விளக்க ஆரம்பித்தான். அவரும் நான் நாளைக்கு ஏற்பாடு செய்கிறேன் என்றார். நானும் அடுத்த நாள் சென்றேன். அவரும் எடுத்து கொடுத்து விட்டு 100gm ரூ.20/- என்றார். நான் திடுக்கிட்டு மதுரையில் கிலோவே ரூ.90/- தானே. நீங்கள் சொல்வதை பார்த்தால் கிலோ ரூ.200/-க்கு சொல்கிறீர்களே என்றேன். அதற்கு அவர் என்ன கூறினார் தெரியுமா? கிடைக்காத பொருளென்றால் அப்படித்தான் என்றார்.

இதிலிருந்து எனக்கு விளங்குவது என்னவென்றால்,

1) கருப்பட்டியை தமிழர்கள் மறக்க தொடங்கி விட்டார்கள், அல்லது
2) சத்தமில்லாமல் இந்த உலகத்தை விட்டு கருப்பட்டியை ஒழிக்க தொடங்கி விட்டார்கள்

கருப்பட்டி... மிக சிறந்த இனிப்பு பலகாரங்களுக்கு உதவும் ஒரு பொருள் மட்டுமல்ல. அது மருத்துவ குணங்களும் நிறைந்தது.

1) சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்
2) அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்பநில மனநோய் குணமாகும்.

இப்பேர்ப்பட்ட கருப்பட்டியை நாம் மறந்து கொண்டிருக்கிறோம். அன்பர்களே நாம் இப்படி ஒவ்வொன்றாக இழந்து கொண்டிருந்தால் இறுதியில் நாம் நம் அடையாளத்தை இழந்து விடுவோம். நம் குழந்தைகளிடம் நமது உணவு முறைகளையும் அதன் மகிமைகளையும் எடுத்து கூறுங்கள். மக்கள் தொடர்ந்து கேட்டால்தான் கடைகாரர்களும் அதை வாங்கி வைப்பார்கள். நாம் வெறும் பெப்சியும் கோக்கும் மட்டும் கேட்டால் அவர்கள் அதை மட்டும்தான் மக்கள் பார்வையில் வைப்பார்கள். நாளடைவில் நமது உணவு பொருள்களும் கிடைக்காது, மறந்தும் போகும் நமது அடுத்த தலைமுறையினருக்கு.
மேலும் படிக்க......

சனி, 9 ஜனவரி, 2010

வட்டம் [Circle], அண்டம் [Galaxy], பேரண்டம் [Universe], வெற்றிடம் [Vacuum], சதாசிவம் [SathaSivam]


வட்ட வழிக்குள்ளே மருவும் சதாசிவத்தைக்
கிட்ட வழிதேடக் கிருபை செய்வது எக்காலம்?

இது பதினெண் சித்தர்களில் ஒருவரான பத்திரகிரியாரின் மெயஞானப்புலம்பலில் உள்ள 71வது பாடல்.

இதன் அர்த்தம் யாதெனில் நமது உலகம், அண்டம் மற்றும் பேரண்டம் அனைத்துமே வட்ட வடிவானவை. இது அனைத்திலுமே நிரம்பியவனே சதா சிவமயமானவன். இவனை நம் கிட்டத்தில் [அருகில்] பார்க்க எப்போது அருள் கிடைக்கும் என்பதே.

இதில் என்ன பேரதிசயம் என்கிறீர்களா?

நம் உலகம் வட்டம் என்று கண்டு பிடித்த ஒரு விஞ்ஞானியை முட்டாள் என்று சொன்ன உலகம் இது. ஆனால் அதன் பிறகு உணர்ந்த உலகம் இது. இந்த நிகழ்வுகள் அனைத்துமே தற்சமயத்தில் நடந்த விடயங்கள். ஆனால் இந்த சித்தர் எந்த நூற்றாண்டை சேர்ந்தவர்? இவர் பட்டினத்தாரின் சீடர் எனப்படுகிறது. பட்டினத்தார் கி.பி.11ம் நூற்றாண்டை சேர்ந்தவர். எனவே பத்திரகிரியாரின் காலமும் இதுவே எனப்படுகிறது. அப்படியானால் இந்த பேரண்டத்தில் உள்ள அனைத்துமே வட்ட வடிவானவை என்று எப்படி இவரால் கணித்திருக்க இயலும்? இச்சித்தர்களின் நுண்ணறிவை நாமும் ஆராய்தல் வேண்டும்.

மேலும் "வட்ட தேற்றம் [Circular Theory]" என்று ஒன்று உண்டு. இதன் படி பார்த்தால் இந்த உலகில் அனைத்தும் வட்ட வடிவானவையே [ஆதாரம்: www.circular-theory.com]. இந்த வலைதளத்தை படித்துப்பாருங்கள். மிகவும் பயனுள்ள அதே சமயம் ஆச்சரியப்படத்தக்க வகையிலே அமைந்த ஒரு வலைத்தளம்.

இந்த தேற்றத்தின் படி,

1) காலம் [Time] வட்ட வடிவானவையே:

காலம். இந்த வார்த்தை மற்றும் இதன் தாத்பரியம் எல்லாம் எதனால் உருவானது? இந்த பேரண்டத்தில் உள்ள நிகழ்வுகளால் அல்லது மாற்றங்களால் அல்லது இட மாற்றத்தால் [Movements] உருவானது. இவை அனைத்துமே மறுபடியும் நடக்க கூடியது. அப்படியானால் இந்நிகழ்வுகள் அல்லது இம்மாற்றங்கள் அல்லது இவ்விடமாற்றங்கள் அனைத்துமே மறுபடியும் [Repeat] நடக்க கூடியவையே. மறுபடியும் என்ற நிகழ்வு நிகழும் போதே இது வட்ட வடிவானவை என்பது முடிவாகிறது.

2) சக்தி [Energy] வட்ட வடிவானவையே

சக்தி. இந்த வார்த்தை மற்றும் இதன் தாத்பரியம் எல்லாம் எதனால் உருவானது? இந்த பேரண்டத்தில் உள்ள நிகழ்வுகளால் அல்லது மாற்றங்களால் அல்லது இட மாற்றத்தால் [Movements] உருவானது. ஏனெனில் ஒரு இயக்கம் இல்லாமல் எதுவும் நகராது. இயக்கம் வேண்டுமெனில் சக்தி வேண்டும். காலம் வட்ட வடிவானவையாக இருக்கும்போது அதை அடிப்படையாக கொண்டு இயங்கும் சக்தியும் வட்ட வடிவானவையாகவே இருக்கும்.

3) வெளி [Space] வட்ட வடிவானவையே

ஆதாரம்: http://en.wikipedia.org/wiki/Shape_of_the_Universe#Spherical_universe

வட்டம். இந்த வடிவத்தை நம் குழந்தைகள் ஆராய்ந்தால் [முனைவர் பட்டத்துக்காக] மேலும் நமக்கு விவரங்கள் கிடைக்கலாம். அதைதான் நாம் எதிர்பார்க்கவேண்டும்.
மேலும் படிக்க......

திங்கள், 28 டிசம்பர், 2009

அண்டம், [Galaxy] பிண்டமும் [Body] - 2வது பாகம்


இதன் முதல் பாகத்தை பற்றி இங்கே படிக்கலாம். அதன் சுருக்கம் என்னவென்றால்,

அண்டத்தி னுள்ளே அளப்பரி தானவள்
பிண்டத்தி னுள்ளே பெருவெளி கண்டவள்
குண்டத்தி னுள்ளே குணம்பல காணினும்
கண்டத்தி னுள்ளே கலப்பறி யார்களே

இது திருமூலரின் திருமந்திரப்பாடல்.

இதன் அர்த்தம் யாதெனில்,

அண்டமும் பிண்டமும் ஒன்று. அண்டத்தில் தேடுவதை விட பிண்டத்தில் உள்ளதை தேடுவதே சாலச்சிறந்தது. இதன் தொடர்ச்சியே இந்த பாகம்.

அறிவியலின் படி நமது பூமி மற்றும் சூரிய குடும்பம் அக்ரீசின் டிஸ்க்கிலிருந்து [Accretion Disc] உருவானது [http://en.wikipedia.org/wiki/Timeline_of_evolution]. அக்ரீசின் டிஸ்க் என்பது ஒரு வட்ட வடிவ பாதையில் ஒரு மத்திய பொருளை சுற்றி வருகிறது. அந்த மத்திய பொருளின் பெயர் பிளாக் ஹோல் [Black Hole - http://en.wikipedia.org/wiki/Black_hole]. பிளாக் ஹோல் என்பது வான வெளியில் உள்ள ஒரு பகுதி. இதன் ஈர்ப்பு விசை அனைத்தையும் விட பெரியது. ஏன் ஒலி கூட இதிலிருந்து தப்ப முடியாது. இது அனைத்தையும் ஈர்க்கும் ஆனால் ஒன்றும் பிரதிபலிக்காது.

நமது அண்டம் இந்த மாதிரி கேலக்சிக்களாலும் [Galaxy], கருந்துளைகளாலும் [Blackholes, Quasars, Dwarfs, நட்சத்திரங்களாலும் [Stars], இருள் சக்திக்களாலும் [Dark Energy] நிரம்பியதே. இந்த கட்டுரையின் எண்ணம் நமது உலகம் எப்படி உருவானது என்பதுதான்.

அறிவியலின்படி இப்போது அனைவராலும் [அநேகமாக] ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள ஒரு தேற்றம் பெருவெடிப்பு [Big Bang - http://en.wikipedia.org/wiki/Big_bang] தேற்றம்தான். அதன்படி நமது உலகம் ஒன்றாக இருந்ததுதான். ஒன்றாக இருந்தபோது அதிகரித்த அடர்த்தி மற்றும் அதிதீவிர வெட்பம் காரணமாக பெருவெடிப்பு ஏற்பட்டது என்பதே பெருவெடிப்பு தேற்றமாகும்.

ஏனவே ஒன்றில் இருந்து வெளியே வந்ததுதான் அனைத்துமே.

நாம் இப்போது அண்டம் மற்றும் பிண்டம் பற்றிய ஒப்பீடலை பார்ப்போம்.

1. அண்டம் ஒன்றிலிருந்து உருவானது. நம் பிண்டமும்தான்
2. நமது சூரிய குடும்பம் கருந்துளையால் ஏற்படும் அக்ரீசின் டிஸ்க்கிலிருந்து உருவானது. நம் உடல் தாயின் கர்ப்பப்பையிலிருந்து உருவானது
3. அண்டம் ஒன்றாக இருந்து வெடித்து பிளந்து ஒன்றன் பின் ஒன்றாக அனைத்தும் உருவானது. பிண்டமும் ஒன்றாக இருந்து வெடித்து பிளந்து ஒன்றன் பின் ஒன்றாக அனைத்தும் உருவானது.
4. அண்டம் ஒன்றாக இருந்து வெடித்து பிளக்கும் போது அதீத வெட்பமும், அடர்த்தியும் காரணங்கள். நம் பிண்டமும் பிறப்பதற்கு முன்னால் பனிக்குடம் வெடித்து உடைகிறது. அப்போது தாயின் உடலில் எண்ணற்ற மாற்றங்கள். அதீத வெட்பம், அதீத நாடித்துடிப்பு மற்றும் பல.

இன்னும் பல ஒற்றுமைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். இப்போதுள்ள அறிவியல் சூழலில் நம்மால் பிண்டம் உருவாகும் முறையையும் அது வளர்வதையும் அநேகமாக மேலோட்டமாக தெரிந்து கொள்ளலாம். ஆனால் உள்ளே என்ன நடக்கிறது என்று தெரியாமல் நம்மால் அண்டத்தை அளக்க முடியாது. மேலும் நம்மால் இப்போது நமக்கும் நம் தாயின் வயிற்றில் இருந்த போது என்ன நடந்தது என்று நினைவிருக்குமா? நினைவிருந்தால் நம்மால் நம் அண்டத்தின் பிறப்பிடத்தையும் அறிய இயலும் என்பதே எனது எண்ணம்.

திருமூலரும் அவரது பாடலில் இதையே கூறுகிறார் என்று நம்புகிறேன்.
மேலும் படிக்க......

ஞாயிறு, 20 டிசம்பர், 2009

வேறு அண்டங்கள் [Universe] உள்ளனவா?



நம் அண்டத்தையே இன்னும் நம்மால் அளந்து பார்க்க முடிய வில்லை... அதற்குள் இது என்ன கேள்வி என்கிறீர்களா?

இந்த விவாதங்கள் அறிவியல் உலகிலும் சென்று கொண்டுதானிருக்கிறது. அவரவர் தேற்றங்களை வைத்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். சிலர் உண்டென்பர் சிலர் இது இல்லை என்பர். [ஆதாரம்: http://www.space.com/scienceastronomy/generalscience/5mysteries_universes_020205-1.html]

தமிழ் தெரிந்த அனைவருக்கும் தெரிந்த ஒரு பாடலின் வரி இது...

"ஈரேழு உலகமும் எனகுறவாக
ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா..."

இது கந்தர் சஷ்டி பாடல்.

ஈரேழு உலகம் என்னவாக இருக்கும்... அதன் பெயர்கள் என்னவென்று தெரியுமா? அவை இதோ...

ஈரேழு என்றால் பதினான்கு. இவை இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்று மேலுலகம் மற்றொன்று கீழுலகம்.

மேல் உலகங்கள்
---------------------
1) பூலோகம்
2) புவலோகம்
3) சுவலோகம்
4) சனலோகம்
5) தபோலோகம்
6) மகாலோகம்
7) சத்தியலோகம்

கீழ் உலகங்கள்
---------------------
1) அதலலோகம்
2) விதலலோகம்
3) சுதலலோகம்
4) தராதலலோகம்
5) ரசாதலலோகம்
6) மகாதலலோகம்
7) பாதாலலோகம்

அறிவியல் கூற்றுப்படி இன்னும் நம் உலகத்தையே [அண்டத்தையே] நம்மால் இன்னும் சரிவர வரையறுக்க முடியவில்லை. ஆனால் பல உலகங்கள் பற்றியும் ஆய்வுகள் நடந்த வண்ணம்தான் உள்ளன.

இது மேலை நாட்டவர்க்கு சாத்தியம் இல்லை என்றே எனக்கு படுகிறது. ஆனால் நம் தமிழ் குழந்தைகளுக்கு இந்த சாத்தியம் உள்ளது. எப்படி என்று கேட்கிறீர்களா? அவர்களுக்குத்தான் நம் சித்தர் பாடல்களும், திருமந்திரமும் இன்னும் பல அறிய நூல்களும் அடிப்படை காலமாக உள்ளனவே. நாம் பண்ண வேண்டியது என்னவென்றால் நம் குழந்தைகளுக்கு நம் தமிழின் தின்னத்தை பற்றிய தாகத்தை ஏற்படுத்தினால் மட்டும் போதுமானது.
மேலும் படிக்க......

புதன், 16 டிசம்பர், 2009

மூன்று வளையமும், காலம் [Time], சக்தி [Energy] மற்றும் வெளியும் [Space]


பத்திரகிரியார் எனும் சித்தர் தனது மெய்ஞானப் புலம்பலில் 69வது பாடலாக கீழ்க்கண்டதை பாடியுள்ளார்.

"மூன்று வளையம் இட்டு முளைத்தெழுந்த கோணத்தில்
தோன்றும் உருத்திரனைத் தொழுது நிற்பது எக்காலம்?"

இதற்கு ஆன்மீக ரீதியான விளக்கங்கள் எனக்கு கிடைக்கவில்லை. எனக்கெட்டிய அறிவின் படி, இதன் விளக்கம்:

1) மூன்று வளையம் என்பது சக்தி [Energy] எனப்படும் மூலாதாரம், வெளி [Space] அல்லது பள்ளியறை எனப்படும் சுழுமுனை மற்றும் சக்தியை சுழுமுனைக்கு கொண்டு சேர்க்கும் பாதை அதாவது காலம் [Time]. காலம் இல்லையேல் எதுவும் நகராதே. இந்த மூன்று வளையங்களும் இட்டதில் முளைத்து எழுந்த முக்கோணத்தில் தோன்றும் உருத்திரன் [கடவுள் சிவன் அல்லது அவரது ஒரு அம்சம்] இந்த முக்கோணமே முக்காலமும் அறிய உதவும் திறவுகோல். அதாவது சுழுமுனை.

இதுவே இப்பாடலின் ஆன்மீக விளக்கமாக இருக்கலாம். எதுவும் தவறு இருந்தால் கூறவும்.

இப்போது நாம் இதை அறிவியல் ரீதியாக பார்ப்போம்.

1) நமது இந்த உலகம், பால் வெளி, அண்டம் அனைத்துமே மூன்று அடிப்படை உள்பொருட்களால் ஆனது. அவை காலம் [Time], சக்தி [Energy] மற்றும் வெளியும் [Space] (ஆதாரம்: http://en.wikipedia.org/wiki/Universe)

2) நமது அண்டத்தில் இருக்கும் அனைத்துமே உருண்டை தேற்றத்தின் [Circular Theory : http://www.circular-theory.com/] படி உருண்டை வடிவானவைதான். எனினும் அறிவியல் ரீதியாக நமது அண்டம் [Universe] மூன்று வடிவங்களில் இருக்கலாம் என்று கூறுகிறார்கள் [ஆதாரம்: http://en.wikipedia.org/wiki/Shape_of_the_Universe]. ஆனால் உருண்டை தேற்றத்தின் படி இவை மூன்றும் உருண்டையாக இருக்கிறது என்று வைத்து கொள்வோம்.

3) இவை மூன்றும் இல்லையெனில் இந்த உலகம், பெருவெளி, அண்டம் எவையும் இயங்காது என்பது அறிவியல் உண்மை. இவை மூன்றும் இணைந்ததுதான் நமது உலகம் மற்றும் அனைத்தும்


4) கணிதத்தில் போரோமியன் வளையங்கள் [ஆதாரம்: http://en.wikipedia.org/wiki/Borromean_rings] என்று ஒன்று உள்ளது. இது என்னவெனில் மூன்று வளையங்கள் ஒன்றையொன்று உள்வழியாக இணைத்து இருப்பது. இதில் ஒரு வளையத்தை நாம் பிரித்தேடுத்தாலும் மற்ற இரு வளையங்கள் சேர்ந்து இருக்காது
5) இந்த மூன்று வளையங்களும் முட்டிக்கொள்ளும் இடத்தில் ஒரு முக்கோணம் உருவாகும் [படத்தில் காட்டியது போல]. அந்த முக்கோணம்தான் நமது அண்டம், வெளி மற்றும் காலம் சங்கமிக்கும் ஒரு பகுதி. அதாவது மூன்றும் இணையும் போதுதான் வெளிகள் உருவாகின்றன, உலகங்கள் உருவாகின்றன

இது எவ்வாறு நமது சித்தர்களுக்கு தெரிந்திருக்கும் அல்லது உணர்ந்திருப்பார்கள். நாம் நமது தமிழை மேலும் ஆய்வு செய்ய வேண்டும்...
மேலும் படிக்க......