திங்கள், 28 டிசம்பர், 2009

அண்டம், [Galaxy] பிண்டமும் [Body] - 2வது பாகம்


இதன் முதல் பாகத்தை பற்றி இங்கே படிக்கலாம். அதன் சுருக்கம் என்னவென்றால்,

அண்டத்தி னுள்ளே அளப்பரி தானவள்
பிண்டத்தி னுள்ளே பெருவெளி கண்டவள்
குண்டத்தி னுள்ளே குணம்பல காணினும்
கண்டத்தி னுள்ளே கலப்பறி யார்களே

இது திருமூலரின் திருமந்திரப்பாடல்.

இதன் அர்த்தம் யாதெனில்,

அண்டமும் பிண்டமும் ஒன்று. அண்டத்தில் தேடுவதை விட பிண்டத்தில் உள்ளதை தேடுவதே சாலச்சிறந்தது. இதன் தொடர்ச்சியே இந்த பாகம்.

அறிவியலின் படி நமது பூமி மற்றும் சூரிய குடும்பம் அக்ரீசின் டிஸ்க்கிலிருந்து [Accretion Disc] உருவானது [http://en.wikipedia.org/wiki/Timeline_of_evolution]. அக்ரீசின் டிஸ்க் என்பது ஒரு வட்ட வடிவ பாதையில் ஒரு மத்திய பொருளை சுற்றி வருகிறது. அந்த மத்திய பொருளின் பெயர் பிளாக் ஹோல் [Black Hole - http://en.wikipedia.org/wiki/Black_hole]. பிளாக் ஹோல் என்பது வான வெளியில் உள்ள ஒரு பகுதி. இதன் ஈர்ப்பு விசை அனைத்தையும் விட பெரியது. ஏன் ஒலி கூட இதிலிருந்து தப்ப முடியாது. இது அனைத்தையும் ஈர்க்கும் ஆனால் ஒன்றும் பிரதிபலிக்காது.

நமது அண்டம் இந்த மாதிரி கேலக்சிக்களாலும் [Galaxy], கருந்துளைகளாலும் [Blackholes, Quasars, Dwarfs, நட்சத்திரங்களாலும் [Stars], இருள் சக்திக்களாலும் [Dark Energy] நிரம்பியதே. இந்த கட்டுரையின் எண்ணம் நமது உலகம் எப்படி உருவானது என்பதுதான்.

அறிவியலின்படி இப்போது அனைவராலும் [அநேகமாக] ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள ஒரு தேற்றம் பெருவெடிப்பு [Big Bang - http://en.wikipedia.org/wiki/Big_bang] தேற்றம்தான். அதன்படி நமது உலகம் ஒன்றாக இருந்ததுதான். ஒன்றாக இருந்தபோது அதிகரித்த அடர்த்தி மற்றும் அதிதீவிர வெட்பம் காரணமாக பெருவெடிப்பு ஏற்பட்டது என்பதே பெருவெடிப்பு தேற்றமாகும்.

ஏனவே ஒன்றில் இருந்து வெளியே வந்ததுதான் அனைத்துமே.

நாம் இப்போது அண்டம் மற்றும் பிண்டம் பற்றிய ஒப்பீடலை பார்ப்போம்.

1. அண்டம் ஒன்றிலிருந்து உருவானது. நம் பிண்டமும்தான்
2. நமது சூரிய குடும்பம் கருந்துளையால் ஏற்படும் அக்ரீசின் டிஸ்க்கிலிருந்து உருவானது. நம் உடல் தாயின் கர்ப்பப்பையிலிருந்து உருவானது
3. அண்டம் ஒன்றாக இருந்து வெடித்து பிளந்து ஒன்றன் பின் ஒன்றாக அனைத்தும் உருவானது. பிண்டமும் ஒன்றாக இருந்து வெடித்து பிளந்து ஒன்றன் பின் ஒன்றாக அனைத்தும் உருவானது.
4. அண்டம் ஒன்றாக இருந்து வெடித்து பிளக்கும் போது அதீத வெட்பமும், அடர்த்தியும் காரணங்கள். நம் பிண்டமும் பிறப்பதற்கு முன்னால் பனிக்குடம் வெடித்து உடைகிறது. அப்போது தாயின் உடலில் எண்ணற்ற மாற்றங்கள். அதீத வெட்பம், அதீத நாடித்துடிப்பு மற்றும் பல.

இன்னும் பல ஒற்றுமைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். இப்போதுள்ள அறிவியல் சூழலில் நம்மால் பிண்டம் உருவாகும் முறையையும் அது வளர்வதையும் அநேகமாக மேலோட்டமாக தெரிந்து கொள்ளலாம். ஆனால் உள்ளே என்ன நடக்கிறது என்று தெரியாமல் நம்மால் அண்டத்தை அளக்க முடியாது. மேலும் நம்மால் இப்போது நமக்கும் நம் தாயின் வயிற்றில் இருந்த போது என்ன நடந்தது என்று நினைவிருக்குமா? நினைவிருந்தால் நம்மால் நம் அண்டத்தின் பிறப்பிடத்தையும் அறிய இயலும் என்பதே எனது எண்ணம்.

திருமூலரும் அவரது பாடலில் இதையே கூறுகிறார் என்று நம்புகிறேன்.
மேலும் படிக்க......

ஞாயிறு, 20 டிசம்பர், 2009

வேறு அண்டங்கள் [Universe] உள்ளனவா?



நம் அண்டத்தையே இன்னும் நம்மால் அளந்து பார்க்க முடிய வில்லை... அதற்குள் இது என்ன கேள்வி என்கிறீர்களா?

இந்த விவாதங்கள் அறிவியல் உலகிலும் சென்று கொண்டுதானிருக்கிறது. அவரவர் தேற்றங்களை வைத்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். சிலர் உண்டென்பர் சிலர் இது இல்லை என்பர். [ஆதாரம்: http://www.space.com/scienceastronomy/generalscience/5mysteries_universes_020205-1.html]

தமிழ் தெரிந்த அனைவருக்கும் தெரிந்த ஒரு பாடலின் வரி இது...

"ஈரேழு உலகமும் எனகுறவாக
ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா..."

இது கந்தர் சஷ்டி பாடல்.

ஈரேழு உலகம் என்னவாக இருக்கும்... அதன் பெயர்கள் என்னவென்று தெரியுமா? அவை இதோ...

ஈரேழு என்றால் பதினான்கு. இவை இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்று மேலுலகம் மற்றொன்று கீழுலகம்.

மேல் உலகங்கள்
---------------------
1) பூலோகம்
2) புவலோகம்
3) சுவலோகம்
4) சனலோகம்
5) தபோலோகம்
6) மகாலோகம்
7) சத்தியலோகம்

கீழ் உலகங்கள்
---------------------
1) அதலலோகம்
2) விதலலோகம்
3) சுதலலோகம்
4) தராதலலோகம்
5) ரசாதலலோகம்
6) மகாதலலோகம்
7) பாதாலலோகம்

அறிவியல் கூற்றுப்படி இன்னும் நம் உலகத்தையே [அண்டத்தையே] நம்மால் இன்னும் சரிவர வரையறுக்க முடியவில்லை. ஆனால் பல உலகங்கள் பற்றியும் ஆய்வுகள் நடந்த வண்ணம்தான் உள்ளன.

இது மேலை நாட்டவர்க்கு சாத்தியம் இல்லை என்றே எனக்கு படுகிறது. ஆனால் நம் தமிழ் குழந்தைகளுக்கு இந்த சாத்தியம் உள்ளது. எப்படி என்று கேட்கிறீர்களா? அவர்களுக்குத்தான் நம் சித்தர் பாடல்களும், திருமந்திரமும் இன்னும் பல அறிய நூல்களும் அடிப்படை காலமாக உள்ளனவே. நாம் பண்ண வேண்டியது என்னவென்றால் நம் குழந்தைகளுக்கு நம் தமிழின் தின்னத்தை பற்றிய தாகத்தை ஏற்படுத்தினால் மட்டும் போதுமானது.
மேலும் படிக்க......

புதன், 16 டிசம்பர், 2009

மூன்று வளையமும், காலம் [Time], சக்தி [Energy] மற்றும் வெளியும் [Space]


பத்திரகிரியார் எனும் சித்தர் தனது மெய்ஞானப் புலம்பலில் 69வது பாடலாக கீழ்க்கண்டதை பாடியுள்ளார்.

"மூன்று வளையம் இட்டு முளைத்தெழுந்த கோணத்தில்
தோன்றும் உருத்திரனைத் தொழுது நிற்பது எக்காலம்?"

இதற்கு ஆன்மீக ரீதியான விளக்கங்கள் எனக்கு கிடைக்கவில்லை. எனக்கெட்டிய அறிவின் படி, இதன் விளக்கம்:

1) மூன்று வளையம் என்பது சக்தி [Energy] எனப்படும் மூலாதாரம், வெளி [Space] அல்லது பள்ளியறை எனப்படும் சுழுமுனை மற்றும் சக்தியை சுழுமுனைக்கு கொண்டு சேர்க்கும் பாதை அதாவது காலம் [Time]. காலம் இல்லையேல் எதுவும் நகராதே. இந்த மூன்று வளையங்களும் இட்டதில் முளைத்து எழுந்த முக்கோணத்தில் தோன்றும் உருத்திரன் [கடவுள் சிவன் அல்லது அவரது ஒரு அம்சம்] இந்த முக்கோணமே முக்காலமும் அறிய உதவும் திறவுகோல். அதாவது சுழுமுனை.

இதுவே இப்பாடலின் ஆன்மீக விளக்கமாக இருக்கலாம். எதுவும் தவறு இருந்தால் கூறவும்.

இப்போது நாம் இதை அறிவியல் ரீதியாக பார்ப்போம்.

1) நமது இந்த உலகம், பால் வெளி, அண்டம் அனைத்துமே மூன்று அடிப்படை உள்பொருட்களால் ஆனது. அவை காலம் [Time], சக்தி [Energy] மற்றும் வெளியும் [Space] (ஆதாரம்: http://en.wikipedia.org/wiki/Universe)

2) நமது அண்டத்தில் இருக்கும் அனைத்துமே உருண்டை தேற்றத்தின் [Circular Theory : http://www.circular-theory.com/] படி உருண்டை வடிவானவைதான். எனினும் அறிவியல் ரீதியாக நமது அண்டம் [Universe] மூன்று வடிவங்களில் இருக்கலாம் என்று கூறுகிறார்கள் [ஆதாரம்: http://en.wikipedia.org/wiki/Shape_of_the_Universe]. ஆனால் உருண்டை தேற்றத்தின் படி இவை மூன்றும் உருண்டையாக இருக்கிறது என்று வைத்து கொள்வோம்.

3) இவை மூன்றும் இல்லையெனில் இந்த உலகம், பெருவெளி, அண்டம் எவையும் இயங்காது என்பது அறிவியல் உண்மை. இவை மூன்றும் இணைந்ததுதான் நமது உலகம் மற்றும் அனைத்தும்


4) கணிதத்தில் போரோமியன் வளையங்கள் [ஆதாரம்: http://en.wikipedia.org/wiki/Borromean_rings] என்று ஒன்று உள்ளது. இது என்னவெனில் மூன்று வளையங்கள் ஒன்றையொன்று உள்வழியாக இணைத்து இருப்பது. இதில் ஒரு வளையத்தை நாம் பிரித்தேடுத்தாலும் மற்ற இரு வளையங்கள் சேர்ந்து இருக்காது
5) இந்த மூன்று வளையங்களும் முட்டிக்கொள்ளும் இடத்தில் ஒரு முக்கோணம் உருவாகும் [படத்தில் காட்டியது போல]. அந்த முக்கோணம்தான் நமது அண்டம், வெளி மற்றும் காலம் சங்கமிக்கும் ஒரு பகுதி. அதாவது மூன்றும் இணையும் போதுதான் வெளிகள் உருவாகின்றன, உலகங்கள் உருவாகின்றன

இது எவ்வாறு நமது சித்தர்களுக்கு தெரிந்திருக்கும் அல்லது உணர்ந்திருப்பார்கள். நாம் நமது தமிழை மேலும் ஆய்வு செய்ய வேண்டும்...
மேலும் படிக்க......

ஞாயிறு, 6 டிசம்பர், 2009

அண்டம், [Galaxy] பிண்டமும் [Body]!


அண்டத்தி னுள்ளே அளப்பரி தானவள்
பிண்டத்தி னுள்ளே பெருவெளி கண்டவள்
குண்டத்தி னுள்ளே குணம்பல காணினும்
கண்டத்தி னுள்ளே கலப்பறி யார்களே

இது திருமூலரின் திருமந்திரப்பாடல்.

இதன் அர்த்தம் யாதெனில்,

அண்டம் முழுவதும் பரவியிருப்பவளை அளப்பது அரிது,
பிண்டத்தினுள்ளே வியாபித்திருப்பவள்,
குண்டம் வைத்து மந்திரம், குணம் இவை யாவற்றிலும் தேடிப்பார்த்தும்
நம் பிண்டத்திலுள்ளவலை அறியாதவர்கள் வேறெங்கிலும் அவளை அறியார்கள்.

அதாவது இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி அலைவோர்கள் கடவுளை காணமாட்டார்கள் என்பதே இதன் நேரிடையான அர்த்தம்.

இதை நாம் அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்வோம். விடை யாதெனில்,

1) அண்டமும் பிண்டமும் ஒன்று.
2) அண்டத்தை அறிவதற்காக கோடானு கோடி டாலர்கள், ஐரோக்கள், ரூபாய்கள் செலவிடப்படுகின்றன. ஆனால் நாம் தேடுவதை விடுத்து வேறு ஏதாவது தகவல்கள் கிடைக்கின்றன. அதை வைத்து நாம் ஆனந்த கூத்தாடுகிறோம்.
3) பிண்டம் அண்டத்தின் சிறு வடிவே. நாம் அண்டத்துக்கும் பிண்டத்துக்கும் உள்ள தொடர்பை முதலில் ஆய்வு செய்யவேண்டும். அது தெரிந்து விட்டால் நம்மால் அண்டத்தின் ரகசியத்தை தெரிந்து கொள்ளளலாம்.

இதற்கு நம் அடுத்த தமிழ் தலைமுறைதான் செய்ய முடியும். அவர்களுக்கு நாம் அறிவியல் தமிழின் அவசியத்தை உணர்த்தினாலே போதுமானது.

இது எனது கருத்து மட்டுமே. மாற்று கருத்து இருந்தால் பதிவு செய்யுங்கள்.
மேலும் படிக்க......

செவ்வாய், 1 டிசம்பர், 2009

விதியை [Fate] மதியால் [Knowledge] வெல்லலாமா?


அண்டம், பெருவெளி, நமது சூரியக்குடும்பம் [புவி உள்பட] அனைத்துமே ஒரு காந்த விசையால் ஈர்க்கப்பட்டு அப்படியே அந்தரத்தில் அதனதன் வேலைகளை செவ்வனே செய்து வருகின்றன. காந்த மண்டலத்தில் இருக்கும் அனைத்துமே காந்தமாக மாறிவிடுகின்றன. இதுதான் விதி. எனவே நாம் உள்பட அனைவருமே காந்தம்தான்.

விதியால்தான் வினை விளைகிறது. எப்படி என்று கேட்கிறீர்களா?

புவி ஈர்ப்பு விசை என்பது விதி. அந்த ஈர்ப்பு விசையின் காரணமாகத்தான் நாம் அனைவரும் புவியில் இயங்கிக்கொண்டிருக்கிறோம். இல்லையேல் அனைவரும் புவியை விட்டு வெளியே வீசப்பட்டிருப்போம். இதனால்தான் நாம் அனைவரும் நடக்கிறோம், பேசுகிறோம், ஓடுகிறோம் மற்றும் பல வினைகள் புரிகிறோம். இதனால் நிறைய விளைவுகள் இருக்கின்றன. ஆனால் அந்த விளைவுகள் நம் கட்டுபாடின்றி சில சமயம் செல்கின்றன. அப்போதுதான் நாம் கூறுகிறோம், விதியை யாரால் வெல்ல முடியும் என்று? ஆனால் நம் முன்னோர்கள் கூறுகிறார்கள், "விதியை மதியால் வெல்லலாம் என்று". எவ்வாறு?

ஒரு சிறிய உதாரணத்தை வைத்து பார்ப்போமே. ஒரு கிண்ணம் மேசையின் மேல் வைக்கப்பட்டுள்ளது. அதை நாம் தட்டி விடுகிறோம். அதாவது தட்டி விடுதல் என்ற வினையை புரிகிறோம். விளைவு கிண்ணம் தரையில் விழும். அதுதானே விதி. அதாவது புவி ஈர்ப்பு விதி. ஆனால் நாம் மதியால் இதை தடுக்க முடியும். எப்படி? கிண்ணம் எவ்வளவு பெரியது? அது எவ்வளவு உயரத்தில் இருந்து விழுகிறது மற்றும் எவ்வளவு நேரத்தில் அது தரையை தொடும் என்று நாம் கணக்கிட வேண்டும். நாம் அந்த வேகத்தை விட வேகமாக நமது கையை கீழே கொண்டு சென்று அந்த கிண்ணத்தை தாங்கினால் நாம் விதியை வென்று அந்த கிண்ணம் தரையை தொடாமல் பார்த்துக்கொள்ளலாம்.

கிண்ணம் கீழே விழுகும்போது இவ்வளவு நம்மால் கணக்கிட முடியுமா என்று நீங்கள் யோசிக்கலாம். ஆனால் இது முடியவே முடியாது என்று யாரும் கூற இயலாது. ஏனெனில் இது கண்டிப்பாக முடியும். அது அவரவர் திறமையை பொறுத்தது. இதே போல் நம் வாழ்வில் நடக்கும் விளைவுகளையும் [பாதகமாக இருக்கும் பட்சத்தில்] நாம் சீக்கிரம் கணக்கிட்டோமானால் நமக்கு சாதகமாக திருப்பலாம்.
மேலும் படிக்க......