அண்டத்தி னுள்ளே அளப்பரி தானவள்
பிண்டத்தி னுள்ளே பெருவெளி கண்டவள்
குண்டத்தி னுள்ளே குணம்பல காணினும்
கண்டத்தி னுள்ளே கலப்பறி யார்களே
இது திருமூலரின் திருமந்திரப்பாடல்.
இதன் அர்த்தம் யாதெனில்,
அண்டம் முழுவதும் பரவியிருப்பவளை அளப்பது அரிது,
பிண்டத்தினுள்ளே வியாபித்திருப்பவள்,
குண்டம் வைத்து மந்திரம், குணம் இவை யாவற்றிலும் தேடிப்பார்த்தும்
நம் பிண்டத்திலுள்ளவலை அறியாதவர்கள் வேறெங்கிலும் அவளை அறியார்கள்.
அதாவது இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி அலைவோர்கள் கடவுளை காணமாட்டார்கள் என்பதே இதன் நேரிடையான அர்த்தம்.
இதை நாம் அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்வோம். விடை யாதெனில்,
1) அண்டமும் பிண்டமும் ஒன்று.
2) அண்டத்தை அறிவதற்காக கோடானு கோடி டாலர்கள், ஐரோக்கள், ரூபாய்கள் செலவிடப்படுகின்றன. ஆனால் நாம் தேடுவதை விடுத்து வேறு ஏதாவது தகவல்கள் கிடைக்கின்றன. அதை வைத்து நாம் ஆனந்த கூத்தாடுகிறோம்.
3) பிண்டம் அண்டத்தின் சிறு வடிவே. நாம் அண்டத்துக்கும் பிண்டத்துக்கும் உள்ள தொடர்பை முதலில் ஆய்வு செய்யவேண்டும். அது தெரிந்து விட்டால் நம்மால் அண்டத்தின் ரகசியத்தை தெரிந்து கொள்ளளலாம்.
இதற்கு நம் அடுத்த தமிழ் தலைமுறைதான் செய்ய முடியும். அவர்களுக்கு நாம் அறிவியல் தமிழின் அவசியத்தை உணர்த்தினாலே போதுமானது.
இது எனது கருத்து மட்டுமே. மாற்று கருத்து இருந்தால் பதிவு செய்யுங்கள்.
மேலும் படிக்க......
பெருவெளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெருவெளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஞாயிறு, 6 டிசம்பர், 2009
அண்டம், [Galaxy] பிண்டமும் [Body]!
முக்கிய வார்த்தைகள்:
அண்டம்,
தமிழ்,
திருமந்திரம்,
திருமூலர்,
பிண்டம்,
பெருவெளி,
body,
galaxy,
thirumanthiram,
thirumoolar
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
