மருத்துவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மருத்துவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 27 அக்டோபர், 2009

தலைக்குத்துக்கு [Headache] மருந்து

மருத்துவம் அறிந்த சங்கப் புலவர் தாமோதரனார் என்றொருவர் இருந்திருக்கிறார் என்பது அறியப்படுகிறது. அவர் பாடிய பாடல் மருத்துவத்தைக் கூறும் பாடலாக இருக்கக் காணலாம்.

சீந்திற் சருக்கரையும் சுக்குப் பொடியும் தேனுங்கலந்து மோந்தால்' யாருக்குந் தலைவலி நீங்கிவிடும் என்று பாவாணர் உரை வகுக்கின்றார்.

தலைக்குத்து எனும் தலைநோய் நரம்பு மண்டலத்துடன் இணைந்து செயல்படும் மூளையுடன் தொடர்புடையது. இக்கால மருத்துவத்தில் நரம்பு மண்டலக் குறைபாடு (Neurological Deficiency) காரணமாக வரக்கூடிய இனம் காண இயலாத தலைவலிகளை (Unidentified Migraine) மருத்துவர் தாமோதரனார் குறிப்பிடும் ‘தலைக்குத்து' நோய்க்கு இணையாகக் கருதலாம். இந்நோய்த் தீர்வுக்கு மருந்தாக சீந்தில் சருக்கரை, சுக்கு, தேன் இவை மூன்றும் ஆகும். இவை நரம்பு மண்டலங்களின் வலிமைக்குப் பெரிதும் ஊட்டம் அளிப்பவையாகும்" என்று, க. வெங்கடேசன் தனது ஆய்வில் குறிப்பிடுகிறார்.
மேலும் படிக்க......

வியாழன், 22 அக்டோபர், 2009

உணவே மருந்து [Food is Health] : Dr.Kaniappan Padmanaban Ph.D

பண்டைய தமிழிலக்கியங்கள் தமிழர் தம் உணவு முறைகளை எடுத்து விளக்குவதுடன் உணவை உண்பதிலும் உணவைப் பல வகையாகச் சமைத்து உண்பதிலும் முன்னோடியாக விளங்கி நாகரித்தினாலும் பண்பாட்டினாலும் சிறந்து விளங்கியமையைத் தெரிவிக்கிறது.

உயிர் வாழ வேண்டுமானால் உணவு வேண்டும். உணவு இல்லாமல் உயிர் வாழ்தல் என்பது இயலாதது என்பதை உணர்ந்து'

"உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே
உண்டி முதற்றே உணவின் பிண்டம்" என்று உரைத்தனர்.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் என்று தன்னிடமிருக்கும் உணவை மற்றவர்களுக்கும் பகிர்ந்தளித்து அவர்களையும் வாழ்விக்கச் செய்யும் பண்பாட்டினைக் கொண்டிருந்தார்கள்.

தமிழர்களின் உணவுமுறைகள் நிலத்தின் அடிப்படையில் வெவ்வேறு வகையினவாக இருந்திருக்கின்றன. தொழில் அடிப் படையிலும், பருவத்துக்கு ஏற்றவாறும்' வயதுக்குத் தக்கவாறும் அமைந்து காணப்படுகிறது.

இன்றும் நம்மிடையே இப்படிப்பட்ட தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒருவர் டாக்டர். கனியப்பன் பத்மநாபன் Ph.D. இவர் ஜெர்மனியில் கடந்த 36 வருடங்களாக மருத்துவ நச்சியல் துறையில் பணியாற்றி வந்துள்ளார். இவரது பூர்வீகம் தமிழ்நாட்டிலுள்ள சாத்தூர். இவரது கொள்கையும் உணவே மருந்து என்பதுதான். இவர் ஒரு விஞ்ஞானி. இவர் தனது அனுபவங்களையெல்லாம் அவரது இடுகையில் [Blog] பதிந்து வருகிறார். மிக உபயோகமான ஒன்று. நீங்களும் படித்து பாருங்கள். பயனடையுங்கள். http://drkpadmanaban.blogspot.com என்பதே இவரது இடுகை.

மேலும் நாம் நம் உணவை கட்டுபடுத்தினால் கண்ட நோய்களுக்கு உள்ளாகத் தேவையில்லை. எனவே நாம் உணவு பழக்கத்தை கூடிய சீக்கிரம் திருத்திக்கொள்வோமாக.
மேலும் படிக்க......

புதன், 14 அக்டோபர், 2009

யூகிமுனி வைத்திய காவியம்: உட்குத்து வாய்வு [Gastric] தீர வழி!

நமக்கும் மிகவும் பரிச்சயமான உட்குத்து வாய்வு தீர நாம் அனைவரும் நாடுவது அலோபதி முறையில் தயாரான மருந்து மாத்திரைகளைத்தான். நமது தமிழ் காவியங்களிலே இதற்கு ஒரு பகுதியே உள்ளது. அதை மருத்துவ தமிழ் அல்லது சித்தர் தமிழ் என்று கூறுவோம்.

யூகிமுனி என்ற சித்தர் எழுதிய வைத்திய காவியம் புத்தகம் அப்படிப்பட்ட மருத்துவ தமிழ் வகைகளில் ஒன்று. நாம் நம் குழந்தைகளுக்கு பிறந்த நாள் பரிசாகவோ அல்லது பரிட்சையான தருணங்களில் உற்சாகப்படுத்துவதற்க்காகவோ இந்த புத்தகத்தை வாங்கி பரிசாக அளிக்கலாம். விஷயத்துக்கு வருவோம். வாய்வு தீர யூகிமுனி என்ன வழி கூறுகிறார் என்று பார்ப்போமா?

யூகிமுனி வைத்திய காவியம்
===================================
இரதம்கெந்திவெள்ளுள்ளி இயல்பாம்துரிசுசேங்கொட்டை
சரசம்உறவேவேப்பெண்ணெய் தன்னோடொக்கஅரைத்தெடுத்து
பருகச்சீலையில்தான்தடவிப் பரிவாய்ச்சுருட்டித்தான்கொளுத்தி
விரைவேப்பெண்ணெய்அடிக்கடிதான் மீதேவார்த்துத்தைலமிடே.

இடவேதைலம்காசெடைதான் இஞ்சிச்சாறுமுலைப்பால்நெய்
உடனேஉள்ளேகொள்ளதுவும் உரைத்தவேம்பின்எண்ணெயது
வடிவாய்க்கலந்துதான்கொள்ள மகத்தாம்உட்குத்துவாய்வதுதான்
சுடரோன்தன்முன்பனிபோலச் சொல்லாதோடும்கண்டீரே.

உபயோகிக்கும் முறை:
========================
இரசம், கெந்தகம், பூண்டு, துரிசு, சேங்கொட்டை, ஆகியவற்றை சம அளவு எடுத்து வேப்பெண்ணெய் விட்டு அரைத்து சீலையில் தடவி உருட்டி கொளுத்தி மேலும் மேலும் வேப்பெண்ணெய் விட்டு சுடர்த்தைலம் வாங்கவும். இந்த தைலத்தை காசெடை அளவு இஞ்சிசாறு முலைப்பால், நெய், ஆகியவற்றுடன் உள்ளே கொள்ள உட்குத்து வாய்வு என்பது சூரியனைக் கண்ட பனிபோல மறைத்துவிடும்.

இப்படிப்பட்ட அருமையான மருத்துவ புதையல்கள் நம் குழந்தைகளின் அறிவியல் மனத்தை திறக்கலாம். அவை நாளைய மருத்துவ உலகில் நமது தமிழின் பெயரை உச்சத்திற்கு கொண்டு செல்லலாம் என்பது திண்ணம். ஆகையால் நம் குழந்தைகளுக்கு நம் தமிழை ஆய்வு செய்யும் மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்பதே நமது குறிகோளாக இருக்க வேண்டும்.
மேலும் படிக்க......