fate லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
fate லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 1 டிசம்பர், 2009

விதியை [Fate] மதியால் [Knowledge] வெல்லலாமா?


அண்டம், பெருவெளி, நமது சூரியக்குடும்பம் [புவி உள்பட] அனைத்துமே ஒரு காந்த விசையால் ஈர்க்கப்பட்டு அப்படியே அந்தரத்தில் அதனதன் வேலைகளை செவ்வனே செய்து வருகின்றன. காந்த மண்டலத்தில் இருக்கும் அனைத்துமே காந்தமாக மாறிவிடுகின்றன. இதுதான் விதி. எனவே நாம் உள்பட அனைவருமே காந்தம்தான்.

விதியால்தான் வினை விளைகிறது. எப்படி என்று கேட்கிறீர்களா?

புவி ஈர்ப்பு விசை என்பது விதி. அந்த ஈர்ப்பு விசையின் காரணமாகத்தான் நாம் அனைவரும் புவியில் இயங்கிக்கொண்டிருக்கிறோம். இல்லையேல் அனைவரும் புவியை விட்டு வெளியே வீசப்பட்டிருப்போம். இதனால்தான் நாம் அனைவரும் நடக்கிறோம், பேசுகிறோம், ஓடுகிறோம் மற்றும் பல வினைகள் புரிகிறோம். இதனால் நிறைய விளைவுகள் இருக்கின்றன. ஆனால் அந்த விளைவுகள் நம் கட்டுபாடின்றி சில சமயம் செல்கின்றன. அப்போதுதான் நாம் கூறுகிறோம், விதியை யாரால் வெல்ல முடியும் என்று? ஆனால் நம் முன்னோர்கள் கூறுகிறார்கள், "விதியை மதியால் வெல்லலாம் என்று". எவ்வாறு?

ஒரு சிறிய உதாரணத்தை வைத்து பார்ப்போமே. ஒரு கிண்ணம் மேசையின் மேல் வைக்கப்பட்டுள்ளது. அதை நாம் தட்டி விடுகிறோம். அதாவது தட்டி விடுதல் என்ற வினையை புரிகிறோம். விளைவு கிண்ணம் தரையில் விழும். அதுதானே விதி. அதாவது புவி ஈர்ப்பு விதி. ஆனால் நாம் மதியால் இதை தடுக்க முடியும். எப்படி? கிண்ணம் எவ்வளவு பெரியது? அது எவ்வளவு உயரத்தில் இருந்து விழுகிறது மற்றும் எவ்வளவு நேரத்தில் அது தரையை தொடும் என்று நாம் கணக்கிட வேண்டும். நாம் அந்த வேகத்தை விட வேகமாக நமது கையை கீழே கொண்டு சென்று அந்த கிண்ணத்தை தாங்கினால் நாம் விதியை வென்று அந்த கிண்ணம் தரையை தொடாமல் பார்த்துக்கொள்ளலாம்.

கிண்ணம் கீழே விழுகும்போது இவ்வளவு நம்மால் கணக்கிட முடியுமா என்று நீங்கள் யோசிக்கலாம். ஆனால் இது முடியவே முடியாது என்று யாரும் கூற இயலாது. ஏனெனில் இது கண்டிப்பாக முடியும். அது அவரவர் திறமையை பொறுத்தது. இதே போல் நம் வாழ்வில் நடக்கும் விளைவுகளையும் [பாதகமாக இருக்கும் பட்சத்தில்] நாம் சீக்கிரம் கணக்கிட்டோமானால் நமக்கு சாதகமாக திருப்பலாம்.
மேலும் படிக்க......

ஞாயிறு, 29 நவம்பர், 2009

விதியும் [Fate], வினையும் [Action], விளைவும் [Consequence]!!!


விதி என்றால் என்ன? விதிக்கப்பட்டது...
வினை என்றால் என்ன? செயலாக்கப்பட்டது...
விளைவு என்றால் என்ன? விளைந்தது...

விதிக்கப்பட்டதால் செயலாக்கப்பட்டு விளைந்ததா?

இப்படி ஏகப்பட்ட கேள்விகள், குழப்பங்கள் என்று ஒரே மூளைப்புயல் நேரம் [Brain-Storming Session?? :)] எனக்குள்.

விதி யாரால் உருவாக்கப்பட்டது? கடவுள் அல்லது நம்மை இயக்கும் யாரோ ஒருவர். நாம் அறிவியல் முறைப்படி இதை கேள்விக்கு உள்ளாக்குவோம். அப்போதுதானே விடை கிடைக்கும்.

நமது சூரிய குடும்பம் மட்டுமல்லாது அண்டம், பெருவெளி எல்லாமே ஒரு காந்த மண்டலம். ஒன்றன்பால் ஒன்று ஈர்க்கப்பட்டு அப்படியே அந்தரத்தில் உள்ளன. ஒரு காந்த மண்டலத்தில் உள்ளே இருக்கும் அனைத்தும் காந்தமாக மாறிவிடுகின்றன என்பதே அறிவியல் உண்மை. எனவே உள்ளே இருக்கும் சூரியன், நமது பூமி அனைத்துமே காந்தம்தான்... நாமும்தான். அனைத்து காந்தங்களும் ஒன்றை ஒன்று ஈர்த்து அந்தரத்தில் இருக்கின்றன மற்றும் அனைத்து செயல்பாடுகளும் நடக்கின்றன.

இப்போது நாமும் காந்தம்தானே. அப்போது நமக்கும் ஈர்ப்பு சக்தி இருக்கும்தானே. ஒருவரை ஒருவர் ஈர்த்தல். மயிர்கூச்செறிதல், புல்லரித்தல் போன்ற பல வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றன. இதற்கு காரணம் மின் காந்த அலைகள். [ஆதாரம்: http://homeschooling.about.com/library/blsciact11.htm]

இப்போது நாம் சிந்திப்போம்... நாம் காந்த மண்டலத்தில் இருப்பது விதிக்கப்பட்டது. நாம் செய்யும் செயல்பாடுகள் வினைகள். அதனால் விளைவது விளைவுகள். மின் காந்த அலைகளினால்தான் நமது இயக்கம் சீராக இருக்கிறது என்றால்... விதியினால்தான் வினைகள் உருவாகின்றன என்று நாம் பொருள் கொள்ளலாமா?... எனவே நமது செயல்பாடுகள் ஒன்றை ஒன்று தொடர்புடையதாகிறது. நியூட்டனின் 3ஆம் விதி என்னவென்றால் ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர் வினை உண்டு. ஆகவே விதியினால் வினை விளைகிறது. சரிதானே.

விதியை மதியால் வெல்லலாமா? நாளையும் எழுதிகிறேன்... சிறிது யோசிக்க வேண்டாமா அன்பர்களே...
மேலும் படிக்க......