திங்கள், 28 டிசம்பர், 2009

அண்டம், [Galaxy] பிண்டமும் [Body] - 2வது பாகம்


இதன் முதல் பாகத்தை பற்றி இங்கே படிக்கலாம். அதன் சுருக்கம் என்னவென்றால்,

அண்டத்தி னுள்ளே அளப்பரி தானவள்
பிண்டத்தி னுள்ளே பெருவெளி கண்டவள்
குண்டத்தி னுள்ளே குணம்பல காணினும்
கண்டத்தி னுள்ளே கலப்பறி யார்களே

இது திருமூலரின் திருமந்திரப்பாடல்.

இதன் அர்த்தம் யாதெனில்,

அண்டமும் பிண்டமும் ஒன்று. அண்டத்தில் தேடுவதை விட பிண்டத்தில் உள்ளதை தேடுவதே சாலச்சிறந்தது. இதன் தொடர்ச்சியே இந்த பாகம்.

அறிவியலின் படி நமது பூமி மற்றும் சூரிய குடும்பம் அக்ரீசின் டிஸ்க்கிலிருந்து [Accretion Disc] உருவானது [http://en.wikipedia.org/wiki/Timeline_of_evolution]. அக்ரீசின் டிஸ்க் என்பது ஒரு வட்ட வடிவ பாதையில் ஒரு மத்திய பொருளை சுற்றி வருகிறது. அந்த மத்திய பொருளின் பெயர் பிளாக் ஹோல் [Black Hole - http://en.wikipedia.org/wiki/Black_hole]. பிளாக் ஹோல் என்பது வான வெளியில் உள்ள ஒரு பகுதி. இதன் ஈர்ப்பு விசை அனைத்தையும் விட பெரியது. ஏன் ஒலி கூட இதிலிருந்து தப்ப முடியாது. இது அனைத்தையும் ஈர்க்கும் ஆனால் ஒன்றும் பிரதிபலிக்காது.

நமது அண்டம் இந்த மாதிரி கேலக்சிக்களாலும் [Galaxy], கருந்துளைகளாலும் [Blackholes, Quasars, Dwarfs, நட்சத்திரங்களாலும் [Stars], இருள் சக்திக்களாலும் [Dark Energy] நிரம்பியதே. இந்த கட்டுரையின் எண்ணம் நமது உலகம் எப்படி உருவானது என்பதுதான்.

அறிவியலின்படி இப்போது அனைவராலும் [அநேகமாக] ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள ஒரு தேற்றம் பெருவெடிப்பு [Big Bang - http://en.wikipedia.org/wiki/Big_bang] தேற்றம்தான். அதன்படி நமது உலகம் ஒன்றாக இருந்ததுதான். ஒன்றாக இருந்தபோது அதிகரித்த அடர்த்தி மற்றும் அதிதீவிர வெட்பம் காரணமாக பெருவெடிப்பு ஏற்பட்டது என்பதே பெருவெடிப்பு தேற்றமாகும்.

ஏனவே ஒன்றில் இருந்து வெளியே வந்ததுதான் அனைத்துமே.

நாம் இப்போது அண்டம் மற்றும் பிண்டம் பற்றிய ஒப்பீடலை பார்ப்போம்.

1. அண்டம் ஒன்றிலிருந்து உருவானது. நம் பிண்டமும்தான்
2. நமது சூரிய குடும்பம் கருந்துளையால் ஏற்படும் அக்ரீசின் டிஸ்க்கிலிருந்து உருவானது. நம் உடல் தாயின் கர்ப்பப்பையிலிருந்து உருவானது
3. அண்டம் ஒன்றாக இருந்து வெடித்து பிளந்து ஒன்றன் பின் ஒன்றாக அனைத்தும் உருவானது. பிண்டமும் ஒன்றாக இருந்து வெடித்து பிளந்து ஒன்றன் பின் ஒன்றாக அனைத்தும் உருவானது.
4. அண்டம் ஒன்றாக இருந்து வெடித்து பிளக்கும் போது அதீத வெட்பமும், அடர்த்தியும் காரணங்கள். நம் பிண்டமும் பிறப்பதற்கு முன்னால் பனிக்குடம் வெடித்து உடைகிறது. அப்போது தாயின் உடலில் எண்ணற்ற மாற்றங்கள். அதீத வெட்பம், அதீத நாடித்துடிப்பு மற்றும் பல.

இன்னும் பல ஒற்றுமைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். இப்போதுள்ள அறிவியல் சூழலில் நம்மால் பிண்டம் உருவாகும் முறையையும் அது வளர்வதையும் அநேகமாக மேலோட்டமாக தெரிந்து கொள்ளலாம். ஆனால் உள்ளே என்ன நடக்கிறது என்று தெரியாமல் நம்மால் அண்டத்தை அளக்க முடியாது. மேலும் நம்மால் இப்போது நமக்கும் நம் தாயின் வயிற்றில் இருந்த போது என்ன நடந்தது என்று நினைவிருக்குமா? நினைவிருந்தால் நம்மால் நம் அண்டத்தின் பிறப்பிடத்தையும் அறிய இயலும் என்பதே எனது எண்ணம்.

திருமூலரும் அவரது பாடலில் இதையே கூறுகிறார் என்று நம்புகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக