வெள்ளி, 27 நவம்பர், 2009

பஞ்ச பூதங்களும் [Five Elements] நமது உடம்பும் [Human Body]...


நாம் நம் உடம்பை பற்றி என்ன அறிந்திருக்கிறோம்? அவை பஞ்ச பூதங்களுக்குள் அடக்கம் என்றும் கேள்விப்பட்டு இருக்கிறோம். என்றைக்காவது நம் உடம்பில் அவை என்ன என்ன என்று யோசித்திருக்கிறோமா? இதோ அவைகளின் பட்டியல்...

மண்ணின் பகுதி

நரம்பு, இறைச்சி, என்பு, மயிர், தோல் என்னும் ஐந்தும் மண்ணின் பகுதி.

நீரின் பகுதி

நீர், முளை, சுக்கிலம், நிணம், உதிரமெனும் ஐந்தும் நீரின் பகுதி.

தீயின் பகுதி

பசி, சோம்பல், மைதுனம், காட்சி, நீர்வேட்கை என்னும் ஐந்தும் தீயின் பகுதி

காற்றின் பகுதி

போக்கு, வரவு, நோய், கும்பித்தல், மெய்ப்பரிசம் என்னும் ஐந்தும் காற்றின் பகுதி.

ஆகாயத்தின் பகுதி

வெகுளி, மதம், மானம், ஆங்காரம், உலோபம் என்னும் ஐந்தும் ஆகாயத்தின் பகுதி.

வாயு

உடம்பில் ஓடுகின்ற உதிரத்தைப் போல வாயுக்களும் உடம்பில் ஓடிக் கொண்டிருக்கின்றன. அவ்வாயுக்கள் பத்து என்பர். அவை; பிராணன், அபானன், உதானன், வியானன், சமானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்சயன் என்பனவாம்.

நாடி

வாயுக்களைப் போல நாடிகள் 72000 ஆகும். அவற்றுள் முதன்மையான நாடிகள் பத்து என்று குறிப்பிடுவர். அவை இடை, பிங்கலை, சுழுமுனை, காந்தாரி, அத்தி, சிங்குவை, சங்கினி, பூடா, குகு, கன்னி, அலம்புடை என்பன போன்று, பஞ்சபூதங்களின் பரிமாணங்கள் குறிப்பிடப்படுகின்றன.

முடிவுரை

இதில் வாயு மற்றும் நாடி ஆகியவை இன்னும் அறிவியலால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மற்ற அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டதே. மற்றவைகளையும் கூடிய சீக்கிரம் ஏற்றுக்கொள்வார்கள் என்று நம் தமிழ் உள்ளங்கள் நினைத்து ஏமாந்து போக வேண்டாம். அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள்... எப்பொழுது? ஏதேனும் ஒரு தமிழன் அல்லது நமது அடுத்த தலைமுறை தமிழனோ தமிழச்சியோ இதை ஒரு அறிவியல் பாடமாக எடுத்து விளக்கங்களோடு நிருபித்தாலொழிய இதை நம்மால் அடுத்தவர்களை ஒப்புக்கொள்ளவைக்க முடியாது.

1 கருத்து:

Tamizhan சொன்னது…

என்னக்கு ஒரு கேள்வி,

வாயு என்பது தமிழ் வார்த்தையா?

நன்றி
குமார்

கருத்துரையிடுக