செவ்வாய், 17 நவம்பர், 2009

உங்களுக்கு ஆண் குழந்தை [Male Child] வேண்டுமா அல்லது பெண் குழந்தை [Female Child] வேண்டுமா? திருமூலரின் திருமந்திரம் தெரிந்து கொள்ளுங்கள்!


குழவியும் ஆணாம் வலத்தது வாகில்
குழவியும் பெண்ணாம் இடத்தது வாகில்
குழவியும் இரெண்டாம் அபான னெதிர்க்கில்
குழவியும் அலியாகும் கொண்டகால் ஒக்கிலே

இது திருமூலரின் ஒரு அற்புதமான பாடல்.

இந்தப் பாடலிலே ஒரு தம்பதியினர் தமக்கு வேண்டியது ஆண் குழந்தையா, பெண் குழந்தையா என்பதை கணவனே தீர்மானிக்கக் கூடிய ஒரு வழியைச் சொல்லியிருக்கிறார். நவீன மருத்துவத்தின் படி குழந்தையின் பாலை நிர்ணயிப்பது ஆண்கள். இது ஒரு விஞ்ஞானத் தரவு. இதன் படி ஒரு கருவின் பாலை நிர்ணயிக்கும் X அல்லது Y குரோமோஸோம்கள் ஆணிடத்தில் இருந்துதான் உருவாகிறது. குரோமோஸோம்கள் தாமாகவே நிர்ணயிக்கின்றனவே ஒழிய ஆணின் தன்னிச்சையான முயற்சியால் அல்ல என்பதையும் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

ஆனால் திருமூலரின் கூற்றுப்படி கலவியின்போது ஆணினுடைய மூச்சு வலது பக்கமாக வெளிப்படுமெனில் குழந்தை ஆணாகப்
பிறக்குமென்றும், இடப்பக்கமாக இருக்குமெனில் பெண்ணாக இருக்குமென்றும், இரண்டு மூக்கிலும் வெளிப்பட்டால் பாலியல்
குறைபாடுள்ள குழந்தை பிறக்குமென்றும் குறிப்பிடுகிறார்.

இதில் நாம் இரண்டு விடயங்களை பார்க்க வேண்டும். ஒன்று குழந்தை உருவாவதற்கு தேவையான விந்து ஆணிடமிருந்துதான் பெண்ணுக்கு கலவியில் மாற்றப்படுகிறது. இரண்டாவது, ஒரு கருவின் பாலை நிர்ணயிக்கும் X அல்லது Y குரோமோஸோம்கள் ஆணிடத்தில் இருந்துதான் உருவாகிறது என்ற அறிவியல் உண்மை. பெண்களிடம் X குரோமோஸோம் மட்டுமே உள்ளது. எனவே ஆண்களின் மூச்சுக்கும் இந்த குரோமோசோம்களுக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா அல்லது இல்லையா? யார் சொல்வார்கள்? யோகப்பயிற்சி மூலமாக மூச்சை கட்டுப்படுத்தும் பிராணாயாமமும் நம் தமிழில் உண்டு. இதை துருவி ஆராய்ந்து யாரால் நமக்கு விடை சொல்ல முடியும் நமது அடுத்த தலைமுறையினரை தமிழ் ஆராய்ச்சியில் முடுக்கி விட்டாலொழிய இதற்கு வேறு வழி எதுவும் புலப்படவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக