புதன், 11 நவம்பர், 2009

நியூட்டனின் 3வது விதி [Newton's 3rd Law] தமிழில்!!!


ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர் வினை உண்டு. இது மிகவும் பிரசித்தி பெற்ற நியூட்டனின் 3வது விதி.

நமது தமிழில் ஒரு பழமொழி உண்டு. அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். நாம் இதன் அர்த்தத்தை தத்துவார்த்தமாக புரிந்து வைத்திருக்கிறோம். தவறில்லை.

ஆனால் நாம் இப்புவியில் பிறந்திருக்கிறோம். நமக்கு நம் முன்னோர்கள் இன்னொன்றும் சொல்லி வைத்திருக்கிறார்கள். அது என்னவென்றால் "அருளிலார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை". இதன் பொருள் அனைவருக்கும் தெரியும். ஆகையால் நாம் தத்துவங்களை எவ்வாறு அறிவியல் பூர்வமாக கொண்டு வருவது என்று ஆராய்ந்து தமிழை அறிவியல் தமிழாக மாற்றுவதில் இன்றைய இளைஞர்களும், இளைஞிகளும், அடுத்த தலைமுறையினரும் யோசித்தால் வேண்டும்.

சிலர் வாதிடுவார்கள். இது தவறான அணுகுமுறை என்று. பரவாயில்லை. நம் நம்முடைய எண்ணங்களில் நல்லவர்களாக இருக்கிறோம். நமது கடவுளோ அல்லது ஒரு மாயையோ நம்மை நம் எண்ணங்களை வைத்துதான் எடை போடுவார்களே தவிர இவன் பணக்காரன் அல்லது ஏழை என்பதை வைத்து எடை போடமாட்டர்கள். எனவே நாம் நமது தத்துவங்களை ஆராய்ந்து அதை அறிவியல் தளத்தில், உலகில் பதிய வைத்தாலே நம் தமிழ் சுபிட்சமாகும். நாம் சுபிட்சமானால் இவ்வுலகம் நம்மை நோக்கி வரும். இதுதான் அடிப்படை. எனவே பணம் ஒன்றே குறிக்கோள் என்றில்லாமல் தமிழை வளர்ப்பதை குறிகோளாக கொண்டு இயங்கினால் நிச்சயம் நம் அனைவரையும் அனைத்தும் தேடி வரும் என்பது திண்ணம்.

2 கருத்துகள்:

இர.கோகுலன் சொன்னது…

கருத்துக்கள் அருமை...
தொடருங்கள் உங்கள் படைப்புகளை....

Sakthikkumaran Vijayaraghavan சொன்னது…

மிக்க நன்றி ரவிகிரண்.

கருத்துரையிடுக