சனி, 7 நவம்பர், 2009

மாயையும் பிளாக் ஹோலும் [Black Hole] ஒன்றா?


சைவ சித்தாந்தத்தின் படி இப்பூவுலகம் ஒரு காரியப்பொருள். ஒவ்வொரு காரியப்பொருளுக்கும் ஒரு மூலப்பொருள் உண்டு. அப்படியானால் இவ்வுலகின் மூலப்பொருள் என்ன?

அதுதான் மாயை. மாயை என்றால் அது கண்ணுக்கு புலப்படாத அருவப்பொருள் ஆகும். இந்த மாயை எங்கும் நிறைந்திருக்கும். இதுதான் சைவ சித்தாந்தம்.

நாம் இப்போது இதை இது வரையில் அறிவியல் துறையில் கண்டு பிடித்திருக்கும் விடயங்களை வைத்து பார்ப்போம்.

அறிவியலின் படி நமது பூமி அக்ரீசின் டிஸ்க்கிலிருந்து [Accretion Disc] உருவானது [http://en.wikipedia.org/wiki/Timeline_of_evolution]. அக்ரீசின் டிஸ்க் என்பது ஒரு வட்ட வடிவ பாதையில் ஒரு மத்திய பொருளை சுற்றி வருகிறது. அந்த மத்திய பொருளின் பெயர் பிளாக் ஹோல் [Black Hole - http://en.wikipedia.org/wiki/Black_hole]. பிளாக் ஹோல் என்பது வான வெளியில் உள்ள ஒரு பகுதி. இதன் ஈர்ப்பு விசை அனைத்தையும் விட பெரியது. ஏன் ஒலி கூட இதிலிருந்து தப்ப முடியாது. இது அனைத்தையும் ஈர்க்கும் ஆனால் ஒன்றும் பிரதிபலிக்காது. இதனுள்ளே நாம் எதனையும் காண முடியாது. கிட்டத்தட்ட அது ஒரு அருவம் தான்.

எனவே அறிவியல் நமது சைவ சித்தாந்தம் நோக்கி போகிறது என்று கூட நாம் பொருள் கொள்ளலாம். நாம் நம் குழந்தைகளை தமிழை மேலும் ஆராய சொன்னால் இன்னும் கூட நமக்கு மற்றவர்களுக்கு முந்தி பொருள் விளங்கலாம். ஏனெனில் நாம் நம் முன்னோர்கள் வழி வந்தவர்கள்தாமே.

4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

Nice article. You mentioned that sound cannot escape from the black hole. This is true. but more appropriately light and similar electro magnetic waves cannot escape it. that is why it is called blackhole.

Sakthikkumaran Vijayaraghavan சொன்னது…

நன்றி நண்பரே. தங்கள் பெயரை விட்டு சென்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும். உங்களது கருத்து மனதுக்கு மிகவும் தெம்பளிக்கிறது.

nerkuppai thumbi சொன்னது…

CARE NOT FOR PUBLICATION

I wud love to receive all your blog publications. I am not finding "follow" link.
pl guide me. Regards:
M.Sekhar
e-mail: nerkuppai.thumbi@gmail.com
blog: makaranthapezhai.blogspot.com

Sakthikkumaran Vijayaraghavan சொன்னது…

திரு. தும்பி அவர்களுக்கு,

தங்களின் விருப்பத்திற்கேற்ப நான் தற்போது "பின் தொடர்க" என்ற வசதியை எனது இடுகையான http://itsmytamil.blogspot.comல் உருவாக்கியிருக்கிறேன். தங்களின் ஆதரவு இந்த இடுகைக்கு தொடரும் என்று எதிர்பார்க்கிறேன். நன்றி

கருத்துரையிடுக