புதன், 4 நவம்பர், 2009

மந்திரம் [Mantra] அறிவியலா?

மந்திரம்... அறிவியலை பொறுத்த வரை கெட்ட வார்த்தை. ஆன்மீகவாதிகளுக்கு உயிர். இங்கு நாம் மந்திரத்தை ஆன்மீகமாகவும் அறிவியல் பூர்வமாகவும் அலசுவோமே. ஏதாவது ஒத்துப்போகிறதா என்றுதான் பார்ப்போமே.

"ஓம்", இதுதான் அனைத்து இந்து கடவுள்களுக்கும் நாம் உபயோகப்படுத்தும் பிரணவ மந்திரம். ஆன்மீகவாதிகளின் கூற்றை பார்ப்போமே. இந்த மந்திரத்தை "அ", "வு" மற்றும் "ம" என்பதின் கூட்டுச்சொல்லே ஓம் எனும் மந்திரம். இந்த பிரித்தெழுதுதல் முறையில் இதை அம் என்றும் கூறலாம். இந்த வார்த்தை கிட்டத்தட்ட இந்த உலகில் அனைவரும் ஒரு முறையேனும் சொல்லி இருப்பார். எனவே இந்த மந்திரமே உயர்ந்தது என்று கூறுவர். இதை சொன்னால் நம் பிரச்சினைகள் அனைத்தும் உடனே விலகும் என்றும் கூறுவர்.

ஆனால் நம் இன்றைய அறிவியலுக்கு அறிவு பூர்வமான விளக்கங்கள் தேவை. அதை இந்த மந்திரத்தால் கூற முடியுமா? ஆன்மீகவாதிகளும் நம் பெற்றோர்களும் அதை நாம் யாருக்கும் விளக்கத்தேவையில்லை என்று கருத்து கூறுவர். மிகத்தவறு என்றுதான் நான் சொல்வேன். நம் அடுத்த தலைமுறைக்கு அறிவியல் பூர்வமான விளக்கங்கள் தேவை. இல்லையெனில் அவர்கள் இதை தூக்கி எரிந்து விட்டு சென்று விடுவர். அதன் பிறகு கலி முத்தி போச்சு என்று புலம்புவதில் அர்த்தமில்லை.

அறிவியல் பூர்வமான விளக்கங்களுக்கு ஆதாரபூர்வமான உண்மைகள் தேவை. ஒன்றன் பின் ஒன்றாக பார்க்கலாம்.

[1] ஓம். உலகில் தெரிந்தோ தெரியாமலோ அதிகப்படியாக உச்சரிக்கும் ஒரு வார்த்தை. எடுத்துக்காட்டாக பசு கூட அம்மா என்று கத்தும். இவ்வுலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் [தமிழராக இல்லாவிட்டாலும் கூட] ம்மா என்று சொல்லாமல் இருக்காது. எனவே தெரிந்தோ தெரியாமலோ இவ்வார்த்தை அனைவராலும் சொல்லப்படுகிறது.

[2] இயற்பியல் விதிப்படி ஒன்றும் இல்லாத வெற்றிடத்தில் ஒரு இயக்கம் வேண்டுமெனில் அதற்க்கு ஒரு சக்தி தேவை. எடுத்துக்காட்டாக ஒரு இயந்திரம் இயங்க வேண்டுமெனில் அதற்கு மின்சாரம் எனும் சக்தி தேவை. மின்சாரம் நீரிலிருந்து எடுக்கலாம், நிலக்கரியிலிருந்து எடுக்கலாம். ஆனால் அதை ஒரு நிமிடத்தில் செய்து விட முடியுமா? நீரிலிருந்து மின்சாரம் எடுக்க வேண்டுமானால் அதில் ஒரு காற்றாலையை குறிப்பிட்ட வேகத்தில் சுற்ற விட்டோம் என்றால் மின்சாரம் எடுக்கலாம். ஆகவே ஒன்றும் இல்லாத இடத்தில் ஒரு இயக்கத்தை உண்டாக்க வேண்டுமெனில் அதற்கு ஒரு சக்தி தேவை. அச்சக்தியை உருவாக்க தொடர் இயக்கங்கள் தேவை.

[3] இப்போது மேற்கூறிய 2ல் இருந்து நாம் சில விடயங்களை அறிய முற்படலாம். வெற்றிடத்தை நாம் நம் மனமாக, வாழ்வாக எடுத்துகொள்ளலாம். நம் வாழ்வில் இயக்கங்கள் அல்லது வெற்றிகள் உருவாக வேண்டும் என்று நினைக்கிறோம். அப்போது நமக்கு சக்தி தேவை. இங்கு மின்சாரத்தை சக்தியாக உருவகித்து கொள்ளலாம். சக்தி வேண்டுமெனில் நமக்கு ஒரு காற்றாலை போன்ற ஒரு இயந்திரம் தேவை. இங்கு இயந்திரத்தை மந்திரமாக கொள்ளலாம். நமக்கு சக்தி வேண்டுமெனில் இயந்திரத்தை தொடர்ந்து இயக்க வேண்டும். அப்போதுதான் சக்தி உருவாகும். எனவே நாம் ஒரு குறிப்பிட்ட மந்திரத்தை பல பேர் பல முறை சொல்லி அதற்கு ஒரு சக்தியை உருவாக்கி வைத்திருக்கிறோம் என்று நம்புகிறேன். இதில் ஓமெனும் மந்திரத்தை இந்த உலகம் முழுவதும் பல நூற்றாண்டுகளாக கூறி வருகின்றன. எனவே இந்த மந்திரத்தில் சக்தி அதிகமாக கிடைக்கும் என்றே நம்புகிறேன்.

இறுதியாக:

இந்த மந்திரம் ஓம் என்று கூட இருக்க தேவையில்லை. அந்த மந்திரம் "நான் இன்று பரிட்சையில் முதல் மதிப்பெண் எடுக்க வேண்டும்" என்பதுவாக கூட இருக்கலாம். இந்த மந்திரத்தை எவ்வளவு முறை கூறுகிறோமோ அந்த அளவுக்கு சக்தி உருவாகும் அந்த வாக்கியத்துக்கு.

அப்துல் கலாம் மற்றும் நம் முன்னோர்கள் கூறிய "கனவு காணுங்கள்" என்ற வார்த்தைகள் கூட மந்திரங்களே. ஏனெனில் கனவு எப்போது நம் லட்சியமாக மாறும் தெரியுமா? நம்மால் அதை சாதிக்கும் சாத்தியங்கள் இருக்கும் பட்சத்தில். எப்போது அதை சாதிக்க முடியும்? அதை பற்றி அடிக்கடி நினைத்துக்கொண்டே இருக்கும்போது. அப்போதுதான் அந்த எண்ணங்களுக்கு ஒரு சக்தி கிடைக்கும், வழிகளும் தோன்றும்.

எனவே நாமும் மந்திரங்களை உருவாக்க முடியும். அது இறை மந்திரங்களாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

2 கருத்துகள்:

Kayalvizhi சொன்னது…

Hai sathi, Tamil grammar they means 1/4,1/2,1,2 mathri alavu . So we tell that mantra our body have get vibration( Our body have magnetic power they up-serve that power).

Sakthikkumaran Vijayaraghavan சொன்னது…

வேணு அவர்களே,

நம் உடம்பில் காந்த சக்தி உள்ளது அனைவரும் அறிந்ததே. ஆம், நீங்கள் கூறுவது சரிதான். மந்திரங்களை நாம் சரியாக மனபூர்வமாக உச்சரிக்கும்போது நம் உடலில் அதிர்வுகள் உண்டாகும்தான். இதை நான் உணர்ந்திருக்கிறேன்.

நன்றி தங்கள் கருத்துக்களுக்கு.
சக்திக்குமரன் வி.

கருத்துரையிடுக