ஞாயிறு, 4 அக்டோபர், 2009

திருமந்திரம் - திருமூலர்: அன்பே சிவமும், ஒன்று பூஜ்யமாவதும்

அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்து இருப்பாரே!.

இதில் நாம் ஒன்று பூஜ்யமாவது எப்படி என்பதை நமது எதிர் கால தலைமுறைக்கு இரு வகைகளில் எடுத்துரைப்போம். ஒன்று நமது இறை வழிப்படி. மற்றொன்று அறிவியல் முறைப்படி.

நாம் இப்போது திருமூலரின் திருமந்திரத்தை படிப்போம். நாம் அன்பு என்று நினைப்பது அன்பாகாது. ஆனால் இந்த அன்பில்தான் கடவுளும் இருக்கின்றார். எப்படி?இந்த கலியுக அன்பில் சிறு மாற்றம் செயதோமேன்றால் நாம் உண்மையான அன்பை இனம் காணலாம். அன்பு என்பது தாய்மை. தாய்மை என்பது தூய்மை. அது அப்பழுக்கு அற்றது. அது தன்னலம் அற்றது. அது எதுவுமே அற்றது. எனவே நாம் அன்பையும் சூனியம் எனலாம். என்று நாம் அத்தகைய அன்பை பெறுகிறோமோ அன்றே நாம் சிவமாகிறோம். அதாவது கடவுள் ஆகிறோம்.

முதலாவதாக அறிவியல் முறையில்,

நாம் அன்பை ஒன்று என்று எடுத்துக்கொள்வோம். சிவத்தை பூஜ்யம் அல்லது சூனியம் என்று எடுத்துக்கொள்வோம்.

கணித முறைப்படி ஒன்றிலுருந்து ஒன்றைக்கழித்தோமென்றால் நமக்கு பூஜ்யம் கிடைக்கும்.

அதே முறையில் இறை வழிப்படி,

உன்னிலிருந்து உன்னை கழித்தோமென்றால் [அதாவது உன்னிலிருந்து நான் என்ற ஆணவத்தை] நாம் கடவுளை அதாவது அளவிலா அன்பை அடையலாம்.

நாம் நம் எதிர்கால தலைமுறைக்கு எப்படி வேண்டுமென்றாலும் இதை சொல்லிக்கொடுக்கலாம். ஆனால் நாம் இயற்பியலையும், அறிவியலையும், கணிதத்தையும் தமிழோடு சொல்லிக்கொடுத்தொமென்றால் அதை விட நமது குழந்தைகளுக்கு வேறொன்றும் நன்மை பயக்கப்போவதில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக