வியாழன், 8 அக்டோபர், 2009

தமிழகத்தை சேர்ந்த டாக்டர். வெங்கி ராமகிருஷ்ணன் அவர்களுக்கு நோபெல் பரிசு 2009

ஓர் உளம் மகிழும் நற்செய்தி. தமிழத்தில் பிறந்து அமெரிக்காவில் இருக்கும் டாக்டர். வெங்கி ராமகிருஷ்ணன் [வயது 58] அவர்களுக்கு வேதியலில் 2009ம் வருடத்துக்கான நோபெல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. நம் தமிழகத்தில் இருந்து இது 3வது முறை. 1930ல் திரு.சர்.சி.வி.இராமன் அவர்களுக்கும் 1983ல் டாக்டர். எஸ். சந்திரசேகர் அவர்களுக்கும் வழங்கப்பட்டது. இதில் மேலும் பெருமைப்படக்கூடிய விஷயம் என்னவென்றால் டாக்டர். வெங்கி ராமகிருஷ்ணன் அவர்கள் சிறு வயதில் சிதம்பரத்தில் படித்தவர் ஆவார். அவர் மேலும் கூறுகிறார், இந்த அறிவியல் பாடத்தில் எனக்கு இந்த அளவுக்கு ஆர்வம் வருவதற்கு நான் படித்த உயர் நிலை பள்ளியே காரணம் மற்றும் எனது பெற்றோர்கள் இருவரும் சிறந்த அறிவியலாளர்கள் என்கிறார்.

இதில் இருந்து நாம் படித்துக்கொள்ளும் பாடம் என்னவென்றால் நமது குழந்தை பிராயம் மிகவும் முக்கியமானது. அதில் நாம் எந்த அளவுக்கு குழந்தைகளுக்கு அறிவு தாகத்தை ஊட்டுகிறோமோ அந்த அளவுக்கு நம் குழந்தைகள் சாதிக்கும். அந்த அறிவு தாகத்தை நம் தமிழ் அவர்களுக்கு தணிக்கும்.

இந்த முக்கியமான வேளையில் நாம் டாக்டர். ராமகிருஷ்ணன் அவர்களை உளமார வாழ்த்த கடமைப்பட்டிருக்கிறோம்.அனைவரும் வாழ்த்துவோம்.

மேலும் இது பற்றிய விவரங்களுக்கு http://timesofindia.indiatimes.com/world/uk/India-born-scientist-wins-Nobel-Prize-in-Chemistry/articleshow/5099608.cms மற்றும் http://economictimes.indiatimes.com/news/politics/nation/Nobel-prize-winner-Venki-Ramakrishnan-makes-TN-proud/articleshow/5099135.cms

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக