வியாழன், 22 அக்டோபர், 2009

உணவே மருந்து [Food is Health] : Dr.Kaniappan Padmanaban Ph.D

பண்டைய தமிழிலக்கியங்கள் தமிழர் தம் உணவு முறைகளை எடுத்து விளக்குவதுடன் உணவை உண்பதிலும் உணவைப் பல வகையாகச் சமைத்து உண்பதிலும் முன்னோடியாக விளங்கி நாகரித்தினாலும் பண்பாட்டினாலும் சிறந்து விளங்கியமையைத் தெரிவிக்கிறது.

உயிர் வாழ வேண்டுமானால் உணவு வேண்டும். உணவு இல்லாமல் உயிர் வாழ்தல் என்பது இயலாதது என்பதை உணர்ந்து'

"உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே
உண்டி முதற்றே உணவின் பிண்டம்" என்று உரைத்தனர்.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் என்று தன்னிடமிருக்கும் உணவை மற்றவர்களுக்கும் பகிர்ந்தளித்து அவர்களையும் வாழ்விக்கச் செய்யும் பண்பாட்டினைக் கொண்டிருந்தார்கள்.

தமிழர்களின் உணவுமுறைகள் நிலத்தின் அடிப்படையில் வெவ்வேறு வகையினவாக இருந்திருக்கின்றன. தொழில் அடிப் படையிலும், பருவத்துக்கு ஏற்றவாறும்' வயதுக்குத் தக்கவாறும் அமைந்து காணப்படுகிறது.

இன்றும் நம்மிடையே இப்படிப்பட்ட தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒருவர் டாக்டர். கனியப்பன் பத்மநாபன் Ph.D. இவர் ஜெர்மனியில் கடந்த 36 வருடங்களாக மருத்துவ நச்சியல் துறையில் பணியாற்றி வந்துள்ளார். இவரது பூர்வீகம் தமிழ்நாட்டிலுள்ள சாத்தூர். இவரது கொள்கையும் உணவே மருந்து என்பதுதான். இவர் ஒரு விஞ்ஞானி. இவர் தனது அனுபவங்களையெல்லாம் அவரது இடுகையில் [Blog] பதிந்து வருகிறார். மிக உபயோகமான ஒன்று. நீங்களும் படித்து பாருங்கள். பயனடையுங்கள். http://drkpadmanaban.blogspot.com என்பதே இவரது இடுகை.

மேலும் நாம் நம் உணவை கட்டுபடுத்தினால் கண்ட நோய்களுக்கு உள்ளாகத் தேவையில்லை. எனவே நாம் உணவு பழக்கத்தை கூடிய சீக்கிரம் திருத்திக்கொள்வோமாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக