திங்கள், 26 அக்டோபர், 2009

உயிரியற் கொள்கை [Senses]

உலகில் உண்டாகும் உயிர்கள் ஆறுவகையான அறிதல் என்னும் செயலைச் செய்வதாகக் கண்டனர். அவை ஒன்று முதல் ஆறுவகையான அறிதல் என்னும் செயலைக் கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர். அறிதல் என்பது புலன்களின் தொழிலைக் குறிப்பதாகக் கொள்வர்.

“ஓரறிவாவது, உடம்பினால் உற்றுணர்தல்;
ஈரறிவாவது, உற்றுணர்தல், நாவினால் சுவையறிதல்;
மூவறிவாவது, உற்றுணர்தல், சுவையறிதல், மூக்கினால் முகர்ந்தறிதல்;
நாலறிவாவது, உற்றுணர்தல், சுவையறிதல், முகர்ந்தறிதல் கண்ணினால் கண்டறிதல்;
ஐயறிவாவது, உற்றுணர்தல், சுவையறிதல், முகர்ந்தறிதல், கண்டறிதல், செவியினால் கேட்டறிதல்;
ஆறறிவாவது, ஐம்பொறிகளால் அறியும் ஐம்புல வுணர்வுகளோடு மனத்தினால் சிந்தித்தறிதலும் ஆகிய ஆறறிவினை யுடைய உயிர்களாக முறைப்படுத்தியுள்ளனர்',
என்று தொல் காப்பியம் குறிப்பிடுகிறது.

ஆக தொல்காபியம் ஏற்கனவே ஆறாவது அறிவைப்பற்றி சொல்லி இருக்கிறது என்று தெரிகிறது. அது சரி பகுத்தறியும் திறன் இருந்ததால்தானே இதை பற்றி ஒரு முன்னோடியாக சொல்ல முடிகிறது. நமக்குத்தான்..???

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக