திங்கள், 5 அக்டோபர், 2009

அறிவே கடவுள்!

அறிவு வடிவு என்று அறியாத என்னை
அறிவு வடிவு என்று அருள் செய்தான் நந்தி

மற்றும்

அறிவுக்கு அழிவும் இல்லை ஆக்கமும் இல்லை
அறிவுக்கு அறிவு அல்லது ஆதாரம் இல்லை
அறிவே அறிவை அறிதின்றது என்றிட்டு
அறைகின்றன மறை ஈறுகள் தாமே.


என்று கூறுகின்றார் திருமூலர். நாம் நம் குழந்தைகளை அறிவு பூர்வமாக வளர்க்க மிகவும் பாடு படுகிறோம். அவர்களை விளையாட்டு பள்ளிகளில் மிகச்சிறு வயதிலேயே கொண்டு அடைக்கிறோம். ஏனென்று கேட்டால் அறிவு சிறு வயதிலேயே சிறப்பாக விருதியாகுமாம். ஆனால் நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். அறிவும் ஒழுக்கமும் இணைந்து ஒரு குழந்தை வளர்ந்தால்தான் அது நம் வீட்டுக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்க்கும். ஆகையால் நம் குழந்தைகளுக்கு நாம் அறிவின் முக்கியத்துவத்தை சொல்லிக்கொடுக்க வேண்டும். அதோடு இணைந்து ஒழுக்கமும் ஊட்டப்படவேண்டும்.

ஆக அறிவே கடவுள் என்று நம் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுத்தால் அறிவை பற்றிய அறிவு வளரும். அறிவே அறிவை அறிகின்றது என்ற திருமூலரின் வார்த்தைகளை நினைவில் கூர்வோமாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக