செவ்வாய், 6 அக்டோபர், 2009

கார்பன் டை ஆக்சைடும் பேயும் ஒன்றா?

இன்று 30 வயதிற்கு மேல் இருக்கும் அனைவருக்கும் இந்த வாக்கியம் நினைவிருக்கும். நம் பெற்றோர்கள் நம்மிடம், "ஏய் அந்த மரத்தடியில் ராத்திரி படுக்காதே, பேய் பிடித்து விடும்" என்று மிரட்டுவர். இது நம் முன்னோர்களிடம் இருந்து நம் பெற்றோர்கள் தெரிந்து கொண்டது. இன்று நம்மில் எத்தனை பேருக்கு இந்த வாக்கியத்தை நம் குழந்தைகளிடம் சொல்லும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது அல்லது சொல்லி இருக்கிறோம்.

இங்கு பேய் என்பது பேயுமல்ல, மிரட்டல் என்பது மிரட்டலுமல்ல. அதில் ஒரு அறிவியல் உண்மை உள்ளது.

இரவில் மரங்கள் கெட்ட வாயுவை [கார்பன் டை ஆக்சைட்] வெளியிடும் என்பதே அது. இந்த வாயுக்கள் நம் உடம்புக்கு நல்லது அல்ல என்பது அனைவரும் அறிந்த ஒரு உண்மை.

நாம் இந்த அறிவியல் உண்மையையாவது நம் குழந்தைகளுக்கு சொல்லி இருக்கிறோமா? அதிகப்படியாக இருக்காது என்றே நம்புகிறேன். மேலும் இரவில் மரங்கள் கெட்ட வாயுவை வெளியிடுகின்றன என்பது நம் முன்னோர்களுக்கு எப்படி தெரிந்தது? சிந்திக்க வேண்டிய ஒரு கேள்வி அல்லவா. ஆக நம் முன்னோர்கள் நமக்கு முன்னால் என்னவெல்லாம் கண்டு பிடித்து வைத்திருந்தார்கள் என்று எண்ணும்போது வியப்பே மேலிடுகிறது.

1 கருத்து:

சிட்டுக்குருவி சொன்னது…

கலக்கீட்டீங்க பாஸ்

கருத்துரையிடுக